districts

img

பொங்கல் அறுவடைக்கு மஞ்சள் தயார்

கிருஷ்ணகிரி,ஜன.8- பொங்கல் என்றாலே செங்கரும்பும், மஞ்சள் தான் நினைவுக்கு வரும். அதை பாரம்பரிய முறைப்படி வீடுகள் தோறும் வைப்பார்கள். இந்த ஆண்டு பொங்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேன்கனிக்கோட்டை, சூளகிரி, தளி, ராயக்கோட்டை, கெலமங்கலம், காவேரிப் பட்டிணம், போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக பயிரிடப்பட்டுள்ள மஞ்சள் அறுவடைக்கு தயாராக உள்ள தாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் காத்திருக் கின்றனர்.