districts

img

சாம்பல் கழிவு ஏற்றி வரும் லாரிகளை வரைமுறை படுத்த வேண்டும்

பொன்னேரி, ஆக 8- மீஞ்சூர் பேரூராட்சியில் கழிப்பிடம் கட்டுவதற்கு இடத்தினை தேர்வு செய்யவும், சாம்பல் கழிவு ஏற்றி வரும் லாரிகளை வரைமுறை படுத்தவும் சார் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சியில் பொது கழிப்பிடம் கட்டு வதற்கான இடத்தினை தேர்வு செய்து தருமாறும், மீஞ்சூர் பகுதிகளில் வடசென்னை அனல் மின் நிலையம் மற்றும் வல்லூர் தேசிய அனல் மின் நிலையங்களில் இருந்து ஏற்றி வரும் சாம்பல் கழிவுகளை ஏற்றி வரும் லாரிகளை மாசு உரு வாகாத அளவிற்கு இயக்க வும் பொன்னேரி   வரு வாய் சார் ஆட்சியரிடம் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திர சேகர் மனுவினை வழங்கி னார். மீஞ்சூர் பேரூராட்சி யில் பொது கழிப்பிடம் இல்லை என அப்பகுதியில் சிபிஎம் உட்பட பல அமைப்பு கள்  நீண்ட நாளாக கோரிக்கை வைத்திருந்த னர். இதில் பொன்னேரி சட்டமன்றத் தேர்தல் நடை பெற்று வந்த நிலையில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திர சேகரிடம் கழிப்பிடம் கட்டித் தருமாறு அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்த நிலையில்,  இரண்டரை வருடங்களாக அப்பகுதியில் கழிப்பிடம் கட்டுவதற்கான போதுமான இடம் இல்லாததால் பொன்னேரி சார் ஆட்சி யர் வாஹே சங்கேத் பல்வந்த்திடம் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் பி.கதிர்வேல், மீஞ்சூர் முன்னாள் பேரூராட்சி தலைவர் மோகன்ராஜ், மற்றும் வார்டு உறுப்பினர் அபுபக்கர் உட்பட பலர் உடனிருந்து இடத்தினை தேர்வு செய்து தருமாறு புகார் மனு அளித்தனர். உடனடியாக வட்டாட்சி யர் மதிவாணனிடம் கேட்டு அறிந்து பரிசீலனை செய்து இடத்தினை தேர்வு செய்யப்படும் என சார் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.