districts

img

அண்ணாமலை பல்கலை.யில் நெல் விவசாயிகளுக்குப் பயிற்சி

சிதம்பரம், நவ. 11- அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக வேளாண்  துறை மற்றும் விவேகா னந்தா அறக்கட்டளை இணைந்து ஹைதரா பாத்தில் உள்ள இந்திய நெல் ஆராய்ச்சி நிறுவனம் நெல் விவசாயிகளுக்கு ஒரு  நாள் செயல் விளக்க மற்றும்  பயிற்சித் திட்டம்  பல்கலைக் கழக அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் திட்டத்தின் மூலம் பழங்குடியினருக்கு பயனளிக்கும் திட்டத்தின் கீழ் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ராம.கதிரேசன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.  அப்போது அவர் இந்திய நெல் ஆராய்ச்சி நிறுவனம் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் போன்ற தேசிய  மற்றும் சர்வதேச அமைப்பு களுடன் இணைந்து புதுமையான தொழில் நுட்பங்களைக் கொண்டு  வருவதற்கு பல்கலைக் கழகம் தொடர்ந்து செய லாற்றி வருவதாகக் கூறி னார்.  மாவட்டத்தில் நெல் விளையும் பகுதிகளில் விவசாயிகள் எதிர் கொள்ளும் சவால்களை அவர் எடுத்துரைத்தார் இதில் வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் தொழில்நுட்ப பயிற்சி மற்றும் பரிமாற்ற தலைவர் டாக்டர் முத்துக் குமரன் மற்றும் வேளாண் துறை முதல்வர் அங்கயற் கண்ணி தேர்வு கட்டுப்பாடு அலுவலர் ராகேஷ் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.