பண்ருட்டி, மே 4-
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த வரிஞ்சிப்பக்கம் காந்தி நகர் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரமுத்து. இவரது மகன் வீரபத்திரன் (23). செங்கல் சூளை வியாபாரி. இவர் புதன்கிழமை இரவு10 மணியளவில் பண்ருட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மணிநகர் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த பண்ருட்டி ஆர்.எஸ். மணி நகர் 4ஆவது தெருவை சேர்ந்த அன்பரசன் (32) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த வீரபத்திரன் சம்பவ இடத்தி லேயே பலியானார். படுகாயமடைந்த அன்பரசன் கடலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பண்ருட்டி காவல் துறையினர் வீரபத்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தன. மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.