வேலூர், ஜூலை 6 -
வேலூர் மாநகராட்சியின் மையப் பகுதியான கிரீன் சர்க்கிள் பகுதியில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதனால் இதனை குறைக்க பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டன. இந்த ஆய்வுக்கு பின்னர் கிரீன் சர்க்கிள் பூங்காவின் அளவை குறைப்பது டன் அப்பகுதியில் சாலை விரிவாக் கம் செய்யவும் திட்டமிடப்பட் டுள்ளது.
ஆனால் கிரீன் சர்க்கிள் பூங்கா வின் அளவை குறைக்க வேண்டும் என்றால் அதற்கு தேசிய நெடுஞ் சாலைத்துறை ஆணையத்தின் அனுமதி பெற வேண்டும். இதை யடுத்து வேலூர் கிரீன் சர்க்கிள் பூங்காவின் அளவை குறைப் பது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்திற்கு பரிந்துரை அனுப்பப்பட்டது.
மேலும் வேலூர் தொகுதி மக்களவை உறுப்பினர் டி.எம் கதிர் ஆனந்த், இது தொடர்பாக ஒன்றிய சாலைப் போக்குவரத்து, நெடுஞ் சாலை துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக் கைகளை ஏற்று ரூ.7.76 கோடி செலவில் கிரீன் சர்க்கிள் பூங்காவின் அளவு மாற்றியமைப்பது, வடிகால் மற்றும் பாதுகாப்பு பலகைகள் உள் பட அப்பகுதியில் உள்ள சாலையை விரிவாக்கம் செய்வது போன்ற பணிகளை மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் ஒப்புதல் அளித்துள் ளது. எனவே தற்போது சாலை விரிவாக்கம் மேற்கொள்ள ஏல ஆவணங்கள் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.