districts

img

காலமானார்

 சென்னை,ஜன.20- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திருவண்ணாமலை நகர முன்னாள் தலைவராகவும், மாவட்டத்  துணைத் தலைவராகவும்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர குழு உறுப்பினராகவும் செயல் பட்டு வந்தார் சென்னம்மாள். அவர் சனிக்கிழமை(ஜன.20) காலமானார். அவருக்கு வயது 70. சென்னம்மாளுக்கு சாந்தி, செல்வி ஆகிய இரு மகள்கள் உள்ளனர். சென்னம்மாள் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார், நகரச்  செயலாளர் எம். பிரகலாதன், செயற்குழு உறுப்பினர் எம். வீரபத்திரன், நகர நிர்வாகிகள் இ. தங்கமணி, எம். சந்திரசேகரன், தமிழ்செல்வி,  வழக்கறிஞர்கள் எம். ஜெயபால், எஸ். அபிராமன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பிறகு, திருவண்ணாமலை-செங்கம் சாலையில் உள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.