districts

img

கடலூரில் கார் மீது டிப்பர் லாரி மோதல்; தம்பதி காயம்

கடலூர், பிப்.15- கடலூர் மாவட்டம், புவனகிரியை சேர்ந்தவர் சரவணன் (72). இவரது மனைவி சுலோச்சனா (69). இவர்கள் இருவரும் வியாழக்கிழமை புதுச்சேரி யில் நடந்த ஒரு உறவினரின் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புவனகிரியில் இருந்து புதுச்சேரி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். காரை சரவணன் ஓட்டிச் சென்றார்.  அந்த கார் கடலூர்-சிதம்பரம் சாலையில் வந்து கொண்டிருந்தபோது, பின்னால் வந்த டிப்பர் லாரி ஒன்று கார் மீது மோதியது. இதில் கார் முழுமையாக நசுங்கி சேதமடைந்தது.  காயமடைந்த சரவணன் மற்றும் சுலோச்சனாவை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.