கிருஷ்ணகிரி,டிச.11- 30 ஆண்டுகளுக்கு முன்பு தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், வாச்சாத்தி மலை கிராமத்தில் காவல்துறையினர், வனச்சர கர்கள், அரசு அலுவலர்கள் கொடூர சித்திர வதைகள்,கூட்டு பாலியல் வன்கொடுமை களுக்குள்ளாக்கப்பட்ட மலை வாழ் மக்களுக்கு நீதி கேட்டு தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கமும், மார்க்சிஸ்ட் கட்சியும் நடத்திய நீண்ட நெடிய போரா ட்டத்தை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றம் மகத்தான தீர்ப்பளித்தது. அன்றைக்கு வன்கொடு மையில் பாதித்த வாச்சாத்தி பழங்குடி மக்கள் அனைவருக்கும் நிவாரணம், வீடு, நிலம் மற்றும் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை யும் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். சரித்திரம் படைத்த செங்கொடியின் இந்த வெற்றியை நாடு முழுவதும், குறிப்பாக தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளி லும் கொண்டாடி வருகின்றனர். அதன்படி, சூளகிரியில் நடைபெற்ற வெற்றி விழா பொதுக்கூட்டத்திற்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் குமாரவடிவேல் தலைமை தாங்கினார். குண்டப்பா, ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர்கள் பி.டில்லிபாபு, ஏ.வி. சண்முகம், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பொருளாளர் எம்.எம்.ராஜூ, மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இருதயராஜ், ேஜம்ஸ் ஆஞ்சலா மேரி,சி.பி.ஜெயராமன்,முன்னாள் மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். ெஜயராமன், சுரேஷ், சூளகிரி வட்டச் செயலாளர் முனியப்பா, மாதர் சங்க மாவட்டத் தலை வர் சரஸ்வதி,வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் இளவரசன், குறவர் சங்க மாவட்டத் தலைவர் வேலு ஆகியோர் கலந்து கொண்டனர். விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் முருகேசன் நன்றி கூறினார்.