காட்பாடி, டிச. 10- வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பனமடங்கி ஊராட்சிக்கு உட்பட்ட கேசவாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி ஸ்ரீதேவி (22). இவர் வீட்டின் அருகே உள்ள மாந்தோப்புக்கு சென்றார். அப்போது அவரை பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பனமடங்கி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.