districts

img

பட்டா வழங்க வலியுறுத்தி தொடர் முழக்க போராட்டம்

சென்னை மாநகராட்சி 155வது வட்டம், திருமலை நகரில் 70 ஆண்டுகளாக வசித்து வரும் மக்களுக்கு நிலவகை மாற்றம் செய்து பட்டா வழங்க வலியுறுத்தி திங்களன்று (ஜூன் 27) ராமாபுரத்தில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. ராமாபுரம் ஒருங்கிணைந்த திருமலை நகர் குடியிருப்போர் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் தொடங்கி வைத்து பேசினார். முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், சிபிஎம் சட்டமன்ற குழுத் தலைவர் நாகைமாலி, தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.