districts

img

சூறைக்காற்றில் பறந்த ரயில் நிலைய மேற்கூரை

விழுப்புரம், ஜூன் 15-

    விழுப்புரத்தில் கடந்த 2 வாரங்களாக பகலில் வெயில் சுட்டெரித்து வருகிறபோதிலும் மாலை, இரவு நேரங்களில் வெப்பச்சலனம் காரணமாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது.  

    இந்நிலையில், விழுப்புரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்தது. இந்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் விழுப்புரம் ரயில் நிலைய வளாகத்தில் இருந்த மரங்கள், நகராட்சி பூங்காவில் இருந்த மரம், கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்த மரம் என நகரின் பல்வேறு இடங்க ளில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தன.

     மேலும், ரயில் நிலை யத்தில் பயணிகளின் வசதிக் காக  2-வது மற்றும் 3-வது நடை மேடைகளில் பழைய மேற்கூரை கள் அகற்றப்பட்டு புதிய மேற்கூரைகள் அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்ததால் சூறைக்காற்றுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் அந்த மேற்கூரைகள் காற்றில் பறந்தது. இதை பார்த்ததும் நடை மேடையில் நின்றிருந்த பயணி கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.