districts

img

ஊத்தங்கரை அருகே அரசுப் பள்ளி மேற்கூரை இடிந்து மாணவர்கள் காயம்

கிருஷ்ணகிரி, ஆக.28- கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்தில் உள்ளது பெரியதள்ளப்பாடி கிராமம். இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 400 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். 6 மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்ட புதிய வகுப்பறையில்  11 ஆம் வகுப்பு மாணவர்கள் படித்துக் கொண்டிருந்தனர்.  அப்போது திடீரென புதிய வகுப்பறை மேற்கூரையின் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. இதில் 3 மாணவர்கள் காயமடைந்தனர். உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர், இந்த தகவல் அறிந்து வந்த ஊத்தங்கரை காவல் துறையினர், கல்வி அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.