சென்னை, ஜூன் 7-
சென்னையில் பட்டம் பிடிக்கச் சென்ற போது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சிறுவன் உடலை பெற்றோர்கள் தானமாக வழங்கியுள்ளனர்.
சென்னை சூளைமேடு பாரதி தெருவை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது இரண்டாவது மகன் பிரசன்னா. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி யில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 6) மாலை பிரசன்னா தனது நண்பர்களுடன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பட்டம் ஒன்று அறுந்து காற்றில் பறந்து வந்து கொண்டி ருந்தது. இதைப் பார்த்த பிரசன்னா, பட்டத்தைப் பிடிப்பதற்காக அதன் பின்னே ஓடியுள்ளார்.
பிறகு அந்த பட்டம் பெரியார் பாதை பகுதியில் உள்ள ஒரு வீட்டின் இரண்டாவது மாடியில் சிக்கிக் கொண்டது. அதை எடுப்பதற்காகப் பிரசன்னா மாடியின் மீது ஏறி உள்ளார். அப்போது ஒரு மாடியில் இருந்து மற்றொரு மாடிக்குத் தாவ முயன்ற போது 30 அடி உயரத்திலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவ ருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சிறுவனை மீட்டு அருகே இருந்த தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிறுவனைப் பரி சோதித்த மருத்துவர்கள் வரும் வழி யிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரி வித்துள்ளனர். இதுகுறித்து காவல் துறை யினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகன் இறந்த போதும் யாருக்காவது உதவியாக மகன் இருக்கட்டும் என நினைத்த பெற்றோர்கள் மகனின் உடல் உறுப்புகனை தானமாக வழங்கியது அப்பகுதி மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.