districts

img

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.வி.எத்திராஜ் தலைமையில் ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில இணைச் செயலாளர் நிலவு குப்புசாமி, மாவட்டச் செயலாளர் ஜி.பாண்டுரங்கன், பொருளாளர் அ.கலைநேசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எல்.சி.மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.