districts

img

உதவி ஆய்வாளரின் மூக்கை உடைத்த மர்ம நபர்கள்

சென்னை, ஆக. 27- தண்டையார்பேட்டையில் காவல் உதவி ஆய்வாளரை ரோந்து பணியின் போது தாக்கிய மர்ம ஆசாமிகள் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை ஆர்.கே.நகர் காவல் நிலை யத்தில் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் பாலமுருகன். இவர் ஞயிறன்று இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்றுள்ளார். அப்போது சந்தேகம் படும்படியாக நின்றிருந்த 5 பேரை பிடித்து விசாரணை செய்துள்ளார். அதில் ஒரு நபர் கஞ்சா போதையிலும், மற்றவர்கள் குடி போதையிலும் இருந்ததாகக் கூறப்படு கிறது. இந்நிலையில் அவர்கள் திடீரென உதவி ஆய்வாளரை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உதவி ஆய்வாளரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்த னர். அங்கு அவரை பரிசோதனை செய்த தில் அவருக்கு கை, மூக்கு உள்ளிட்ட பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ஆர்.கே. நகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதிக மக்கள் நடமாட்டம் உள்ள வைத்தியநாதன் பாலம் அருகே நடைபெற்ற இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.