கிருஷ்ணகிரி, ஜன. 13- வனத்தோடும் வன விலங்குக ளோடும் காலங்காலமாக பின்னிப் பிணைந்து வாழ்ந்தவர்களே மலைவாழ் பழங்குடி மக்கள். இந்த நிலையில்,கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, தருமபுரி ஆகிய நான்கு வட்டங்கள் வனப் பகுதி களாக இணைத்து காவிரி தெற்கு வனவிலங்குகள் சரணாலயம் அமைக்கப்படுவதாக அறிவித்துள்ள னர். சரணாலயம் என்ற பெயரில் அப்பகுதியில் உள்ள மக்களின் 300-க்கும் மேற்பட்ட சிறு சிறு வாழ்விடங் களில் இருந்து, மூன்று தலைமுறை களுக்கு மேல் பயன்படுத்தி வந்த மக்களின் விவசாய நிலங்களில் இருந்து சுமார் 15,000 பேரை வெளி யேற்றி 1600 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு காவிரி தெற்கு வன விலங்கு சரணாலயம் அறிவித்துள்ள னர். அதற்காக மலைவாழ் பழங்குடி தலித் பிற்படுத்தப்பட்ட மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி வருகின்றனர். குறிப்பாக, 2006 இல் நிறைவேற்றப்பட்ட வன உரிமைச் சட்டத்துக்கு எதிராக, ஒட்டுமொத்த மலை கிராமங்களில் வசித்து வரும் மக்கள் குடியிருப்புகளை காலி செய்து கொண்டு வெளியேற வேண்டும் என்று 3 ஆவது முறையாக வனச்சரக அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். மேலும், 3 முறை அஞ்செட்டி யில் கிராம கூட்டங்களை நடத்தி னர். ஆனால், கூட்டங்களுக்கு முறையாக தகவல் கொடுப்ப தில்லை. அப்படியே தகவல் தெரிந்து அந்த கூட்டங்களில் கலந்து கொண்டவர்களையும் பேச அனுமதிக்கவில்லை. வன உரிமை சட்டத்தையும் மதிப்பதில்லை. இதையடுத்து, வனத்துறையினரின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து கூட்டங்களை புறக்கணித்து வெளியேறியுள்ளனர். இந்த நிலையில், அஞ்செட்டி வனத்துறை பகுதிக்கான மக்களின் கூட்டம் ஓசூர் சாராட்சியர் அலுவல கத்தில் நடைபெற உள்ளதாக ஒரு சிலருக்கு மட்டும் தகவல் தெரி வித்துள்ளனர். குறிப்பாக உரிகம், கோட்டையூர், ஜவளகிரி வனப் பகுதி மக்களுக்கு தகவல் தெரிவிக்க வில்லை. இந்த நிலையில், தமிழ்நாடு பழங்குடி மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் குமார வடிவேல், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ், மார்க்சிஸ்ட் கட்சி வட்டச் செயலாளர் தேவராஜ் ஆகியோர் சென்றுள்ளார். அப்போது, கூட்டத்தில் துவக்கத் திலேயே அஞ்செட்டி தெற்கு பகுதி வனச்சரகத்திற்கு உட்பட்ட மக்களுக்கு கூட்டம் என்பதால் மற்ற பகுதியை சேர்ந்தவர்களுக்கு பேச அனுமதி இல்லை என்று கூறியுள்ள னர். இதனால், கோபமடைந்த தலை வர்கள் வன சரக அதிகாரிகள் மக்கள் விரோத செயல்பாட்டிற்கு கண்டனம் தெரிவித்து வெளியேறினர். மேலும், பாதிக்கப்படும் மக்களை திரட்டி போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.