சென்னை,மே 18- ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது41). இவர் தனது வீட்டு அருகில் வசிக்கும் உறவினர் ஒருவரின் 16-ம் நாள் துக்க காரிய நிகழ்ச் சிக்காக 10-ம் வகுப்பு பயிலும் தனது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோ மற்றும் 3 இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த 8 பேர் கொண்ட மர்மகும்பல் சீனிவாசனை பயங்கர ஆயுதங்களுடன் தாக்கினர். தாக்குதலில் பலத்த காயம் அடைந்த சீனிவாசன் சம்பவ இடத்திலேயே பலியானார். தனது தந்தை தாக்கப்படுவதை கண்ட மகன் தடுக்க முயன்றபோது அவரையும் மர்மகும்பல் தாக்கியதில் பலத்த காயம் அடைந்தார்.