districts

img

வரவுக்கும் - செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்க வேண்டும் இடைக்கமிட்டி மாநாடு வலியுறுத்தல்

சென்னை, அக். 20- போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்க வேண்டும் என சிபிஎம் போக்குவரத்து அரங்க இடைக்கமிட்டி மாநாடு வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை போக்குவரத்து அரங்க இடைக்கமிட்டி 13ஆவது மாநாடு கொடுங்கையூரில் தோழர் சு.லெனின் சுந்தர் நினைவரங்கில் செவ்வாயன்று (அக். 22) நடைபெற்றது. இ.அழகேசன் கட்சிக் கொடியை ஏற்றினார். சி.பாண்டி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் மாநாட்டை துவக்கி வைத்தார். செயலாளர் ஐ.கே.மணி வேலை அறிக்கையையும், பி.மணி வரவு - செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.லோகநாதன் வாழ்த்தியும் மாநிலக்குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன் மாநாட்டை நிறைவு செய்தும் பேசினர். இடைக்கமிட்டி உறுப்பினர் எஸ்.பிரசன்ன வெங்கடேஸ்வரன் நன்றி கூறினார். முன்னதாக பி.பாபு வரவேற்றார். தீர்மானங்கள் போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வு பெறும் போது அனைத்து பணிக்கால பயன்களையும் உடனடியாக வழங்க வேண்டும், மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர், கழிவு நீர் அகற்றல் கட்டணம் உயர்வு ஆகியவற்றை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படியை நிலுவைத் தொகையுடன் சேர்த்து உடனே வழங்க வேண்டும், நிறுத்தப்பட்ட பேருந்துகள் அனைத்தையும் மீண்டும் இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இடைக்கமிட்டி தேர்வு 7 பேர் கொண்ட போக்குவரத்து அரங்க இடைக்கமிட்டிக்கு செயலாளராக ஐ.கே.மணி தேர்வு செய்யப்பட்டார்.