சிதம்பரம், ஜூன் 13-
கடல் வாழ் உயிரினங்கள் உணவாக மட்டுமல்லாது மருந்தாகவும் பயன்படுகிறது. அந்தவகையில் கடல்வாழ் உயி ரினமான திருக்கை மீனிலி ருந்து முக்கிய மருத்துவ மூலக்கூறுகளைப் பிரித்து எடுத்துச் சாதனை புரிந்துள்ளார் அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல் அறிவி யல் புல பேராசிரியர் ஆறு முகம் மற்றும் அவருடைய ஆராய்ச்சிக் குழுவினர்.
பொதுவாகத் திருக்கை (திருக்கார்) மீன்கள் விஷ முடைய நீண்ட முட்களைக் கொண்டது. அம்மீன்களில் உள்ள முட்களை நீக்கி விட்டு உணவுக்காக அதனைப் பயன்படுத்துகிறார்கள். இந்த முட்களிலுள்ள மருந்து பொருட்கள் மூலம் ரத்தம் உறை தலை தடுக்கவும், புற்று நோய் செல்களை அழிக்கும் மருந்தாகவோ பயன்படுத்த முடியும்.
மேலும் இதன் மூலக்கூறுக ளிலிருந்து ஆற்றல் மிக்க வலி நிவாரணி மருந்து உரு வாக்க முடியும். இது சம்மந்த மாக உலகளாவிய அளவில் ஆராய்ச்சிகள் நடைபெற்று வரு கிறது.
இந்தக் குறிப்பிட்ட ஆராய்ச்சிக்கு மத்திய அறி வியல் மற்றும் தொழில்நுட்ப துறை, பேராசிரியர் எம்.ஆறு முகம் தலைமையிலான குழு வினருக்கு ரூ2.75 கோடி நிதி வழங்கி உதவியது. இதையடுத்து அண்ணாமலை ப்பல்கலைக்கழக துணை வேந்தர் ஆர்.எம்.கதிரேசன், பதிவாளர் பேராசிரியர் சிங்காரவேல் ஆகி யோர் பேராசிரியர் எம்.ஆறு முகம், ஆராய்ச்சி மாணவி எஸ்.உத்ரா உள்ளிட்ட ஆராய்ச்சி குழுவினரை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
இதுகுறித்து பேராசிரியர் ஆறுமுகம் கூறுகையில், கடந்த 2022 ஆண்டு முதல் அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயராய்வு மையம் கடல் வளம் மற்றும் உயிரினங்களில் மருந்துப் பொருட்கள் தயாரிப்பது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. அப்போது திருக்கை மீனில் உள்ள முட்களை அதிக அளவில் நீக்கிப் போட்டுள்ளதை எடுத்துப் பதபடுத்தி ஆராய்ச்சி யில் ஈடுபட்டபோது இது போன்ற மருத்துவக் குணங் கள் உள்ளது தெரிய வந்தது. என்றார்.