6ஆவது செயற்கைக்கோள் நகரமாக மாறும் மாமல்லபுரம்
சென்னை, செப். 18- சென்னைக்கு அருகே ஆறாவது புதிய நகரமாக கிழக்கு கடற்கரை சாலையில் மகாபலிபுரம் அருகே செயற்கைக்கோள் நகரம் உருவாக்கப்படும் என சமீபத்தில் ஆளுநர் சட்டப்பேரவையில் தனது உரையின் போது தெரிவித்தார். அந்த வகையில் பெரும் பொருட் செலவில் சென்னையின் புதிய அடை யாளமாகவும், சென்னையின் புதிய துணை நகரமாகவும் மாமல்ல புரத்தை மாற்ற திட்டமிடப்பட் டுள்ளது. இதற்காக 25 கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த கிராமங்களை சென்னைக்கு இணையாக சர்வதேச தரத்தில் மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வரும் காலத்தில் இங்கு மெட்ரோ அமைக்க வாய்ப்புள்ளதா கவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து மாநில வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பாக மகாபலிபுரத்தில் உயர்த்தப்பட உள்ள கிராமங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே சென்னையில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சுற்றுலா பகுதிகளை மேம்படுத் துவது, புதிய சுற்றுலாத் தலங்களை உருவாக்குவது என பல முக்கிய மான நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் முக்கியமாக சென்னை கடற் கரையை சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தில்லி கொல்கத் தாவில் உருவாக்கப் பட்டது போல், நியூ டவுன்கள், சாட்டிலைட் சிட்டிகள், துணைக்கோள் நகரங்கள் போல மாமல்லபுரத்திலும் புதிய நகரை கொண்டு வர முடிவு செய்யப்பட் டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு, வளவன்தாங்கல், நெம்மேலி, கிருஷ்ணங்கரனை, சலவன்குப்பம், சந்தானம் பட்டு, திருப்போரூர், தண்டலம், ஆலத்தூர், வெங்கலரி, பட்டிப்புலம், சிறுதாவூர், கருங்குழி பள்ளம், பையனூர், காரணை, பஞ்சானந் தூர், அதிகமநல்லூர் அமைஞ் சான்பட்டி நல்லூர், தஞ்சை நல்லூர், கொக்கிலமேடு,
மாமல்ல புரம், காடம்பட்டி, பெருமளனேரி, வடகடம்பாடி, நல்லான் பிள்ளை பெற்றான், பூஞ்சேரி ஆகிய 25 கிராமங்கள் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் குறிப்பிட்ட 25 கிராமங் களை சர்வதேச தரத்திற்கு நகரங்களாக மாற்றி அங்கிருக்கும் பழமையான புராதன சின்னங்களை பாதிக்காமல் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக இத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 25 கிராமங்கள் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும் நிலை யில், மாமல்லபுரம் சென்னையின் புதிய துணை நகரமாகவும், துணை அடையாளமாகவும் மாறும். மேலும் இங்கே முதலீடுகள் குவியும் என்றும், போக்குவரத்து அதிகரிக் கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பெரும் முதலீட்டில் இந்த துணைக்கோள் நகரம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு மிக அருகில் மாமல்லபுரம் இருப்பதால் இங்கு நிறைய கடல் வளம் இருப்பது நாம் அறிந்ததே. மேலும் இது கடற்கரை கோயில்களுக்கு புகழ் பெற்றது. இதனால் இப்பகுதியில் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகம். இதையடுத்து இங்கே துணைக்கோள் நகரம் வரும் பட்சத்தில் இங்கு மின்சார ரயில் சேவையும் மெட்ரோ ரயில் சேவையும் இணைக்கப்படும். இந்நிலையில் தற்போது மாமல்லபுரத்தில் இந்த நியூ டவுன் அமைப்பதற்கான பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட உள்ளது. இதற்கான திட்ட அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை
சென்னை, செப். 18- அம்பத்தூர் ஞானமூர்த்தி நகர் விட்டல் தெருவில் வசிப்பவர் ராஜேஷ் (40). அவர் அம்பத்தூர் பகுதியில் 3 மதுபானக் கூடங்களை நடத்தி வருகிறார். இவர் கடந்த 16ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான தஞ்சாவூருக்கு சென்றார். பின்னர் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு வீடு திரும்பியவர்கள் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 50 சவரன் நகைகள், ரூ 50 லட்சம், விலை உயர்ந்த வாட்ச் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்ட இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ராஜேஷ் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணா சாலை ஸ்பென்சர் பிளாசா சந்திப்பில் கூகுள் மேப் உதவியுடன் போக்குவரத்தை கண்காணிக்கும் காவலர்கள்
சென்னை, செப். 18- போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் நவீன தொழில்நுட்பம் மூலம் அனைத்து சிக்கல்களையும் போக்குவரத்து காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். அதை அடிப்படையாக வைத்து போக்குவரத்து மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. சென்னையில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதி கரித்து வருகிறது. மேலும், மழைநீர் வடி கால்வாய், மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் வாகனங்கள் வழக்கமான வேகத்தில் செல்ல முடியாத நிலை உள்ளது. இச்சூழலில் போக்குவரத்து நெரி சலுக்கு நிரந்தரத் தீர்வு காண சென்னை போக்குவரத்து காவலர்கள் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரு கின்றனர். அதன் ஒரு பகுதியாக நவீன தொழில் நுட்பத்தின் உதவியுடன் சென்னையில் உள்ள 300-க்கும் மேற்பட்ட சிக்னல்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதாவது ஒரு நாளைக்கு எத்தனை வாக னங்கள் சிக்னல்களை கடக்கின்றன? எத்தனை வாகனங்கள் சிக்னல்களில் காத்தி ருக்கின்றன, எவ்வளவு நேரம் காத்திருக் கிறது, காத்திருக்கும் வாகனங்கள் எந்த வகை வாகனங்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்படு கின்றன. இதற்காக ரூ.1 கோடி மதிப்பில் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அக்கருவி, கூகுள் மேப்பில் தற்போது இணைக்கப்பட்டுள்ளது. இதனால் தகவல்கள் விரைவாகவும் துல்லியமாகவும் சேகரிக்கப்படுகின்றன. திரட்டப்படும் தகவல்களை அடிப்படை யாகக் கொண்டு, தேவைக்கு தகுந்த வாறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப் படுகின்றன. அதன்படி, அண்ணா சாலை ஸ்பென்சர் பிளாசா சந்திப்பு உட்பட பல்வேறு முக்கிய பகுதிகளில் போக்கு வரத்து காவல்துறையினர் போக்குவரத்து மாற்றங்களை சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். அதற்கு நல்ல பலனும் கிடைத்து வருகிறது என சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர் தெரிவித்தார். மேலும், கல்வி நிறுவனங்கள், வாகனங்கள் சாலை சந்திப்புகள் உள்ளிட்ட முக்கிய மற்றும் அதிமுக்கிய இடங்களில் போக்குவரத்து காவலர்கள் வாகனங்கள் ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சாலை சந்திப்புகளில் கூட்டமாக நின்று கொண்டு வாகனங்களை மறிக்கக் கூடாது. குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் நின்று மட்டுமே வாகன சோதனை நடத்தி, விதிமீறிய வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போக்குவரத்து காவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் டெங்குக்கு சிறப்பு வார்டு
திருவள்ளூர், செப்.18- திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருவ தால் சுகாதார நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் 70 படுக்கை வசதி கொண்ட தனி சிகிச்சை பிரிவு திறக்கப் பட்டுள்ளது. இதுவரை 6 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். டெங்கு காய்ச்சல் மேலும் பரவ வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனி சிகிச்சை வார்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது டெங்கு காய்ச்சலால் ஒரு சிறுமி மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் டெங்கு அறிகுறிகளுடன் 37 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களது ரத்த மாதிரி பரிசோதனை அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. திலகவதி கூறியதாவது:- திருவள்ளூர் மாவட்டத்தில் பொது மக்கள் காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு சென்று உரிய சிகிச்சை பெற வேண்டும். ஓரிரு நாட்களில் காய்ச்சல் குணமாக விட்டால், பசியின்மை, குமட்டல், வாந்தி, உடல் சோர்வு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேறுதல், வாய், பல், ஈறு மற்றும் மூக்கில் இருந்து ரத்த கசிவு, வயிற்று வலி, மூச்சு விட சிரமம், மலம் கருப்பாக வெளியேறு தல், மயக்கம் ஏற்படுதல் என, இவற்றில் ஏதாவது ஒரு அறிகுறி இருந்தால், உடனடி யாக அரசு மருத்துவமனைக்கு வரவும். இங்கு, டெங்கு மற்றும் காய்ச்சலுக் கான ரத்த பரிசோதனை செய்யப்படுகிறது. திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், டெங்கு மற்றும் காய்ச்சலை குணப்படுத்த தேவையான மருந்து, நரம்பு வழி வாயிலாக செலுத்தப் படும் மருந்து, திரவம், நிலவேம்பு கசாயம், ரத்த தட்டணுக்கள் குறைவு சரிசெய்ய, 24 மணி நேரமும் சிறப்பு பிரிவு இயங்கும். எந்த நேரத்திலும், டெங்கு பாதிக்கப்பட்டோர் மருத்துவமனையை அணுகலாம். இவ்வாறு அவர் கூறினார்.
கிராம மக்கள் திடீர் சாலை மறியல்
விழுப்புரம், செப். 18- விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தந்தி ராயன்பேட்டையை சேர்ந்தவர் சந்திரன் (40). இவர் கவுன்சிலராக உள்ளார். அதே ஊரைச் சேர்ந்த மணி கண்டன் (35), சண்முகம் (30), கார்த்திக் (29) ஆகி யோருடன் புதுவை நோக்கி காரில் சென்றார். அப்போது கிளியனூர் அருகே தென் கோடிப்பாக்கம் மேம்பாலத்தை கடந்தபோது, சாலையில் இருந்த தடுப்பு கட்டையில் மோதி கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் வந்த கவுன்சிலர் சந்திரன் உள்ளிட்ட 4 பேரும் பலத்த காயமடைந்தனர். அந்த ஊரைச் சேர்ந்த பொதுமக்கள் 4 பேரையும் மீட்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தகவல் அறிந்து தென்கோடி பாக்கத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தில் திரண்டனர். மேம்பாலம் அருகில் இருள் சூழ்ந்துள்ளது. அதனால் இங்கு அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. ஆகையால் இங்கு உயர் மின் அழுத்த கோபுர விளக்கு அமைக்க வேண்டுமென வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.