திருப்பத்தூர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு கடந்த 80 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட இடத்தில் நீச்சல் குளம், பூங்கா அமைக்க முடிவு செய்திருக்கும் மாவட்ட நிர்வாகம், அந்தப் பகுதிகளில் வசிக்கும் தூய்மை பணியாளர்களை காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகரமன்றத் தலைவர், ஆணையர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரை சந்தித்தனர். ஆனாலும், எந்த பலனும் இல்லை. இதனால், குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் காசி, கேசவன், ரவி, ரங்கன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இதனையடுத்து, நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. பிறகு, சட்டமன்ற உறுப்பினர் தலையீட்டு, மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுக்கும் வரை வீடுகளை காலி செய்யவேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதனையடுத்து, போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக்கொண்டனர்.