சென்னை,ஜூலை 14-
தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம், கல்யாண சுந்தரம் தெருவை சேர்ந்தவர் பொன்னுதாஸ்(வயது48). திருமுடி வாக்கத்தில் ஏ.கே.ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார்.
இவரது மனைவி ஜான்சி ராணி(45). குன்றத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணி செய்து வந்தார். இவர் களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஒருவர் கல்லூரியிலும் மற்றொருவர் 9-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். வழக்கம் போல் பள்ளி-கல்லூரிக்கு சென்ற இருவரும் வியாழ னன்று வீடு திரும்பினர். அப்போது வீட்டில் உள்ள அறையில் தந்தை பொன்னுதாஸ், தாய் ஜான்சிராணி ஆகியோர் கடன் தொல்லையால் தனித்தனியாக மின்விசிறி யில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.