வேலூர் மாவட்டத்தில் தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச்சங்கத்தின் (கோ- ஆப்டெக்ஸ்) கைத்தறி ரகங்களின் சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் வே.ரா. சுப்புலெட்சுமி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள சாரதி மாளிகையில் தொடங்கி வைத்தார். இதில் வேலூர் சட்டமன்ற உறுப்பி னர் ப.கார்த்திகேயன். மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார். கைத்தறி உதவி இயக்குநர் சத்தியபாமா, முதுநிலை மண்டல மேலாளர் ஞானபிரகாசம், மேலாளர் மா. வசந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.