தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் வெள்ளியன்று (டிச.31) சைதாப்பேட்டையில் கலை இரவு நடைபெற்றது. ஊர்கூடி ஓவியம், நாடகம் என நடைபெற்ற இந்நிகழ்வில், ‘ஜெய்பீம்’ திரைப்படக் கலைஞர் மற்றும் களநாயகர்கள் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் களப்போராளி முதனை ஆர்.கோவிந்தன் கட்சி மேற்கொண்ட சவால்களை விவரித்தார். திரைக்கலைஞர்கள் மணிகண்டன், தமிழரசன், பேரா.காளீஸ்வரன் மற்றும் தமுஎகச நிர்வாகிகள் சைதை ஜெ. கி.அன்பரசன், முன்னணியின் நிர்வாகிகள் கே.சாமுவேல்ராஜ், கே.சுவாமிநாதன், கே.மணிகண்டன் உள்ளிட்டோர் உள்ளனர்.