தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்கள், நடத்துனர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதைக் கண்டித்தும், உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும் அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) சார்பில் திருப்பத்தூர் பணிமனை அருகே செயலாளர் முகுந்தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு அமைப்பாளர் கேசவன், நிர்வாகிகள் சுரேஷ், முத்து, ஜெயசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.