கிருஷ்ணகிரி, செப்.3- பட்டியலின மக்களுக்கு நிலத்தை ஒப்படைக்காவிடில் இம்மாதம் 30ஆம் தேதி நிலத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் கூறியுள்ளார். இதுகுறித்து விவரம் வருமாறு: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டம், கோட்டையூரில் 1985 ஆம் ஆண்டு 42 பட்டியலின மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா தமிழ்நாடு அரசு வழங்கியது. 40 ஆண்டுகளை கடந்தும் அந்த மக்களுக்கு நிலத்தை ஒப்படைக்கவில்லை. அதேபோல் சூளகிரி வட்டம், சானமாவு கிராமத்தில் 1998 ஆம் ஆண்டு 41 குடும்பங்களுக்கு 2.75 ஏக்கர் நிலத்தில் பட்டா வழங்கப்பட்டது. தொடர்ந்து வழக்கு, போராட்டங்கள் நடத்திய பிறகு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 16.10.2023 அன்று வீடு கட்டுவதற்கு சென்ற பட்டியலின மக்களை அடித்து விரட்டினர். அரசு அதிகாரிகள் தவறான நடவடிக்கைகளால், நீண்ட கால தாமதத்தால் தற்போது உயர்நீதிமன்ற தடையை எதிர்த்து தடையை நீக்க அரசு மேல்முறையீடு செய்துள்ளது. ஓசூர் வட்டம்,சென்னத்தூரில் 45 பட்டிய லின குடும்பங்களுக்கு 1998 ஆம் ஆண்டு 2.5 ஏக்கர் நிலத்தில் பட்டா வழங்கப்பட்டது. இதுவரை அந்த நிலமும் ஒப்படைக்கப்படவில்லை. இந்த நிலையில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், மார்க்சிஸ்ட் கட்சியும் சட்டப் போராட்டத்துடன் மக்கள் மன்றத்திலும் போராடி வருகிறது. அதன்படி கோட்டையூர், சான மாவு, சென்னத்தூர் பட்டியலின மக்க ளுக்கு வழங்கப்பட்ட பட்டாவுக் கான நிலத்தில் அந்த மக்களை உடனடியாக குடிஅமர்த்த வலி யுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செப்.2 அன்று பெருந்திரள் முறையீடு போராட்டத்தை நடத்தியது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் ஆனந்தகுமார் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் கே. சாமு வேல்ராஜ், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் பி. டில்லிபாபு, மாவட்டச் செயலாளர் ஜி.கே. நஞ்சுண்டன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைத் தலை வர் ஜி. ஆனந்தன், மாவட்டச் செய லாளர் எம்.நாகேஷ் பாபு ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். ஆட்சியர் பேச்சுவார்த்தை இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு, வருவாய் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து, போராட்டத்தில் பங்கேற்ற மக்களி டம் பேசிய சாமுவேல்ராஜ், “ கோட்டையூர் நிலத்தில் வழக்கு இல்லாத பட்டாதாரர்களுக்கு உடனடியாக நிலத்தை ஒப்படைப்பு செய்கிறோம். சானமாவு விவ காரத்தில் சென்னை உயர்நீதிமன்ற தடைக்கு எதிராக அரசு சார்பில் மேல்முறையீடு செய்து தடையை விலக்கிக் கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வீடுகள் கட்டிக்கொள்ள அனுமதிக்கிறோம். அதேபோல், சென்னத்தூர் மக்க ளுக்கு நீதிமன்றத்தில் அரசு சார்பில் மேல்முறையீடு செய்து பட்டா தாரர்களின் நிலத்தை ஒப்படைக்க முயற்சி எடுக்கப்படும்என்றும் மாவட்ட ஆட்சி யர் உறுதிய ளித்துள்ளார். அதன்படி, இந்த மாத இறுதிக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்குறுதியை நிறை வேற்ற தவறினால் செப்டம்பர் 30 ஆம் தேதி தோழர் சீனிவாசராவ் நினைவு தினத்தன்று, மூன்று கிராமங்களிலும் பட்டியலின மக்களுக்கு அரசு வழங்கிய நிலத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப்படும்” என்றார்.