districts

img

சுமைப்பணி தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

 தனி நல வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.பழனி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.குமார், சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.முத்துக்குமரன், மாவட்டச் செயலாளர் ஆர்.மூர்த்தி, மாவட்ட பொருளாளர் வி.பாலகிருஷ்ணன், துணைச் செயலாளர் எம்.முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.