districts

img

அண்ணா விளையாட்டு அரங்கில் கோடைகால தடகள பயிற்சி நிறைவு

கடலூர், மே 31- கடலூர் மாவட்ட தடகள  கழகத்தின் சார்பாக அண்ணா விளையாட்டு அரங்கில் கடந்த 15 நாட்க ளாக கோடைகால சிறப்பு  பயிற்சி முகாம் நடை பெற்றது. மாணவர்களுக்கு தினமும் காலை, மாலை இரண்டு வேலையும் சிறப்பு பயிற்சிகள் கொடுக்கப் பட்டது. இந்த பயிற்சியின் நிறைவு விழா நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட தடகள கழகத்தின் தலைவர் டி.கே. ராஜேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் பங்கேற்ற இந்திய  ஹேண்ட் பால் மகளிர் அணியின் பயிற்றுனர் கார்த் திகேயன், “தேசிய மற்றும் சர்வதேச அளவில்  தங்க ளுடைய திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்” என்றார். மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார், மற்றும் பயிற்றுநர்கள் மாய கிருஷ்ணன், தெய்வசிகா மணி, இணைச் செயலாளர் பாபு, மூத்த விளையாட்டு வீரர் ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட தடகள கழகத்தின் பொருளாளர் அசோகன் நன்றி கூறினார். நிறைவு விழாவில்  பங்கேற்ற வீரர்களுக்கு சான்றிதழ் கொடுக்கப் பட்டது.