districts

img

மாற்றுத்திறனாளிகள் கொடுத்த சந்தாக்கள்

வந்தவாசி, ஜூலை 20- திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தீக்கதிர் சந்தாக்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை (ஜூலை 20) நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைக்கான சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் 6 ஆண்டு சந்தாக்களை, கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் நிர்வாகிகள் வழங்கினர். சங்கத்தின் மாவட்டப் பொரு ளாளர் வி.அரிக்கிருஷ்ணன், பாக்கியலட்சுமி, காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சி.சங்கர் ஆகியோர் அப்போது உடனிருந்தனர். இந்த நிகழ்ச்சியில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், நாம் கொடுக்கும் சந்தாக்களை விட மாற்றுத்திறனாளி தோழர்கள் கொடுத்த இந்த 6 சந்தாக்கள் பாராட்டுக் குரியது என்றார். இந்த நிகழ்ச்சியில் கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்டச்செயலாளர் சிவக்குமார், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.டி.சங்கரி, மாவட்ட செயற்  குழு உறுப்பினர் வீர பத்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.