சென்னை, நவ. 29- சென்னை நங்கநல்லூரில் பணிபுரியும் ஜெகதீசன் (கேங்மேன்) புதனன்று (நவ. 29) உயர் மின் அழுத்த லைனில் பணி புரிந்து கொண்டிருக்கும் போது மின் விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும், அவரது குடும்பத்தில் ஒரு வருக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும், இது போன்ற பணிகளில் கேங்மேன்களை பயன்படுத்தக் கூடாது என வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழி யர் மத்திய அமைப்பின் சார்பில் உயி ரிழந்த தொழிலாளியின் சடலத்துடன் மின் மின்சார வாரியம் கே.கே.நகர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் தி.nஜய்சங்கர், மாநில செயலாளர் கண்ணன், மண்டல செய லாளர் ஏ.முருகானந்தம் மற்றும் கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.