இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலக் கல்லூரி கிளை மாநாடு புதனன்று (மார்ச் 23) சென்னை நிருபர்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கிளைத் தலைவர் யுகசாந்தி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டை அக்கல்லூரியின் முதல்வர் முனைவர் சு.ராமன் துவக்கி வைத்தார். ஊடகவியலாளர் மகிழ்நன், சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் நிருபன் சக்கரவர்த்தி, மத்திய சென்னை மாவட்டத் தலைவர் மிருதுளா, செயலாளர் எல்.விக்னேஷ்வரன் உள்ளிட்டோர் பேசினர்.