districts

img

எலும்புக்கூடாக காட்சியளிக்கும் மின்கம்பங்கள்

கடலூர்,மே 29- கடலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் மாவட்ட  காவல்துறை கண்காணிப் பாளர் அலுவலகம் அருகே சிமெண்ட் காரைகள் பெயர்ந்து உள்ள மின்கம் பங்கள் அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.  கடலூர் நகராட்சியின் முக்கிய பகுதியாக மாவட்ட  காவல்துறை கண்காணிப் பாளர் அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற அலுவலகம் உள்ளது.  இந்த அலுவலகத்தின் அருகே உயரழுத்த மின்கம் பங்கள் சிமெண்ட் காரைகள்  பெயர்ந்து கான்கிரீட் கம்பி கள் வெளியே காட்சியளித்து எலும்புக்கூடாக நின்று அச்சுறுத்துகிறது. இந்த வழியாகத்தான் பொதுமக்கள் நீதிபதிகள், வழக்கறிஞர்கள்,   காவல்துறை கண்காணிப் பாளர் உள்ளிட்ட ஏராள மானோர் சென்று வருகின் றனர். விபத்துக்கள் நிகழ் வதற்கு முன்பு பழுதடைந்த மின்கம்பங்கள் அகற்றி புதிய மின்கம்பங்கள் அமைக்க வேண்டும் என மின்வாரியத் திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;