districts

சதாப்தி ரயில் ஜோலார் பேட்டையில் நின்று செல்லும்

சென்னை,ஜூலை 4-  

      சென்னை-பெங்களூரு இடையே வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும் சதாப்தி விரைவு ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதன்  அடிப்படையில் சென்னை சென்ட்ரல்-கே.எஸ்.ஆர்.  பெங்களூரு இடையே இயக்கப்படும் சதாப்தி விரைவு ரயில், ஜோலார் பேட்டை சந்திப்பு ரயில் நிலையத்தில் நின்று செல்ல ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி சதாப்தி விரைவு ரயில் (வ.எண். 12027) ஜோலார்பேட்டையில் இரவு 8.14 மணிக்கு நின்று செல்லும். இந்த வசதி வருகிற 9-ந்தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. மறுமார்க்கமாக கே.எஸ்.ஆர். பெங்களூரு-சென்னை  சென்ட்ரலுக்கு இயக்கப் படும் சதாப்தி விரைவு ரயில்  (வ.எண். 12028) ஜோலார் பேட்டை ரயில் நிலையத்தில்  காலை 7.49 மணிக்கு நின்று செல்லும். இந்த வசதி வருகிற 10-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

;