districts

என்எல்சியில் தொடர் விபத்து ஏற்படுவது ஏன் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை, ஆக.17-

     என்எல்சி சுரங்கத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் விபத்துகள் மூலம் தொழி லாளர்கள் உயிரிழப்பை எவ்வாறு எடுத்துக் கொள்வது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

     நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி காலை தொழி லாளர்கள் வேலை செய்து கொண்டி ருந்தனர். அப்போது 5-வது யூனிட்டில் உள்ள பாய்லர் திடீரென வெடித்து தீப்பிடித்ததில் 15 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், சிலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை பதிவு செய்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, என்எல்சி அதி காரிகளான கோதண்டம், முத்துக்கண்ணு உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்தனர்.

      இந்த மனு நீதிபதி ஆர்.எம்.டி. டீக்கா ராமன் முன்பு வியாழக்கிழமை விசார ணைக்கு வந்தது. உயிரிழந்த தொழிலா ளர்களின் குடும்பத்தினர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.பாலு, முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.

     மேலும், “சுரங்கத்தில் ஏற்படும் விபத்து கள் மூலம் உயிரிழப்புகள் நிகழ்ந்து வரு கிறது. இவ்வாறு உயிரிழக்கும் தொழிலா ளர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு அல்லது கருணைத் தொகை வழங்க வில்லை. விபத்துகள் தொடர்பாக காவல் துறையில் எந்த நடவடிக்கையும் எடுக்கா மல் என்எல்சிக்கு சாதகமாக செயல்படு கிறது”என்றும் வாதிட்டார்.

    காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்க றிஞர் அருள்செல்வம், என்எல்சியில் தொடர்ச்சியாக இதுபோன்ற விபத்துகள் நிகழ்வதாக தெரிவித்தார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த என்எல்சி தரப்பு வழக்கறிஞர் நித்தியானந்தம், “விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும்  காய மடைந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க ப்படுகிறது. உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பு வழங் கப்படுகிறது. இடையீட்டு மனு தாரர்கள் இந்த விவகாரத்தை வேண்டுமென்றே பெரி தாக்கி அரசியல் செய்கின்றனர். தொழிற் சாலையில் ஏற்பட்ட விபத்துக்கு தங்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய முடியாது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு உள்ளது”என்று குறிப்பிட்டார்.

     அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “ஓரிரு விபத்துகள் என்றால் தொழிலாளர்களின் கவனக்குறைவால் ஏற்பட்ட மரணம் என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால், தொடர்ச்சி யாக இதுபோன்ற விபத்துகள் நிகழ்வதை எப்படி எடுத்துக்கொள்வது?” என கேள்வி எழுப்பி, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.