விழுப்புரம், நவ.14- வரி செலுத்தாத திருமண மண்டபம் 5 கடைகளுக்கு விழுப்புரம் நகராட்சி நிர்வாகத்தினர் சீல் வைத்தனர். விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட இடங்களில் உள்ள திருமண மண்டபம், கடைகள், தனியார் நிறுவனங்கள் ரூ. 25 கோடியே 80 லட்சம் வரி செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளன. இதை வசூல் செய்ய விழுப்புரம் நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா நகராட்சி வருவாய் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் அதிகாரிகள் வரி பாக்கியை வசூலித்து வருகின்றனர். இதில் கடந்த 3 ஆண்டுகளாக ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் வரி பாக்கி செலுத்தாத சென்னை சாலையில் உள்ள திருமண மண்டபத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அதேபோல் காமராஜர் தெரு, எம்.ஜி.சாலை, புதிய பேருந்து நிலையம், சாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வரி பாக்கி செலுத்தாத 5 கடைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த நடவடிக்கை மேலும் தொடரும் என நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.