வேளாண் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை
சென்னை, ஜன, 3- சக்தி மசாலா நிறுவனத்தின் ஓர் அங்க மாகிய சக்திதேவி அறக்கட்டளை, வேளாண் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை வழங்கியது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் மைப் பல்கலைக்கழகத்தில், இளங்கலை வேளாண்மை பட்டப் படிப்பு பயிலும் - பொருளாதாரத்தில் நலிவுற்ற 15 மாற்றுத்திறனாளி மாணவ,மாணவிகளுக்கு வருடந்தோறும், நான்கு ஆண்டுகள் படிப்பிற்கான முழு கல்விக் கட்டணத்தை வழங்க முன் வந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, நடப்பு கல்வி ஆண்டில் முதல் ஆண்டு இளங்கலை வேளாண்மை படிப்பினைப் பயிலும் 15 மாணவர்களுக்கு, அண்மையில் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடந்த எளிய விழாவில் மொத்தம் ரூ. 4,69,500-க்கான வரைவோலைகளை கல்வி உதவித் தொகையாக வழங்கியது. இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் அறங்காவலர்கள் டாக்டர் பி.சி. துரைசாமி மற்றும் டாக்டர் சாந்தி துரைசாமி, கோவை, வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் வி. கீதாலட்சுமி, பதிவாளர் டாக்டர் ஆர். தமிழ்வேந்தன், கல்லூரியின் முதல்வர் டாக்டர் என். வெங்கடேச பழனிசாமி, ஒருங்கி ணைப்பாளர் டாக்டர் பி.ஜி. கவிதா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
தாய்-குழந்தை உயிரிழப்பு: உறவினர்கள் மறியல்
காஞ்சிபுரம்,ஜன.3- உத்திரமேரூர் அடுத்த பெருநகர் பழைய காலனியை சேர்ந்த ரகோத்தமன் மனைவி சத்யாவுக்கு (வயது30) செவ்வாயன்று மாலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை உடனடியாக மானாமதியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தில் அனுமதித்தனர். அவருக்கு டாக்டர் லத்திகா மற்றும் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததாக தெரிகிறது. இரவு 11:30 மணியளவில் சத்யாவுக்கு பிறந்த ஆண் குழந்தை இறந்து விட்டதாக சத்யாவின் உறவினர்களிடம் மருத்து வர்கள் தெரிவித்தனர். மேலும் சத்யாவிறகு ரத்தப்போக்கு அதிகமாக உள்ளதால் உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சத்யா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அறிந்ததும் மானாமதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சத்யாவின் உறவினர்கள் ஏராளமானோர் புதனன்று காலை திரண்டனர். அவர்கள் சத்யாவுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் தாயும் குழந்தையும்இறந்துவிட்டதாக குற்றம்சாட்டி மறியலிலும் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் மாவட்ட காவல்துறை துணைத்தலைவர் ஜூலியட் சீசர் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அவர்கள் போராட்டத் தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு நடத்தினர். சத்யா மற்றும் அவரது குழந்தையின் இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதுகுறித்து பெருநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநங்கைகள் விருது பெற ஆட்சியர் அழைப்பு
விழுப்புரம், ஜன.3 - சிறந்த திருநங்கைக்கான விருது பெற விரும்பும் தகுதியுடைய திருநங் கைகள் விண்ணப்பிக்கலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சி.பழனி தெரி வித்துள்ளார். திருநங்கைகளை சிறப்பிக்கும் வகையில் 2023-2024 ஆம் ஆண்டுக் கான சிறந்த திருநங்கைக் கான விருது தமிழ்நாடு முதல மைச்சரால் வழங்கப்பட வுள்ளது. இவ்விருது பெறும் சாதனையாளருக்கு ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டு சான்று வழங்கப்படும். இந்த விருது பெற விரும்புபவர்கள் அரசு உதவி பெறும் கட்டமைத்துக் கொண்டு திருநங்கையாக தனது வாழ்க்கையில் இருக்க வேண்டும். மேலும் திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து இருக்க வேண்டும். குறைந்த பட்சம் 5 திருநங்கைகள் தங்களது வாழ்வாதார ஆதரவைப் பெறுவது, கண் ணியமான வாழ்க்கையை நடத்தும் உதவி செய் திருக்க வேண்டும். விருதுக்கு விண்ணப் பிப்பவர் தமிழ்நாடு திருநங்கை நல வாரியத்தில் உறுப்பினராக இருக்க கூடாது. இந்த விருது பெற விரும்பும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த தகுதியுடைய திருநங்கை கள், இணையதளத்தில் இம் மாதம் 31 ஆம் தேதிக் குள் விண்ணப்பிக்க வேண் டும். இறுதி நாளுக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங் கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தாம்பரம் மாநகராட்சி ஆணையரை கண்டித்து போராட்டம்: போலீஸ் தடியடி
தாம்பரம், ஜன.3 - தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் அழகு மீனாவை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தோழமை கட்சிகளின் சார்பில் தாம்பரத்தில் புதன்கிழமை (ஜன.3) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாம்பரம் சென்னை கிறிஸ்தவ கல்லூரி யின் நடத்தும் சமூகக் கல்லூரியை மேயர் மற்றும் துணை மேயரின் ஒப்புதல் இல்லா மல் ஆணையர் அத்துமீறி சீல் வைத்தார். இது குறித்து மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச்செய லாளர் எம்.யாக்கூபை மாநகராட்சி ஆணை யாளர் அழகு மீனா ஒருமையில் திட்டி னார். இதனால் அவரது அராஜகத்தை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி, விடு தலை சிறுத்தைகள் உள்ளிட்ட தோழமை கட்சி களின் சார்பில் தாம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைதியான முறையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் மீது காவல் துணை ஆணையாளர் பவன்குமார் உத்தரவின் பேரில் தடியடி நடைபெற்றது. இதில் பலர் காயமடைந்தனர். போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்களும் தடியடிக்கு உட்பட்டுள் ளனர். அத்துமீறி நடந்து கொண்ட துணை ஆணையாளர் பவன் குமார் மீது உடனடி யாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசை மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம். எச் ஜவாஹிருல்லா கேட்டுக் கொண்டுள்ளார். தாம்பரம் ஆணையாளர் அழகு மீனா மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு முன் வரவேண்டும். கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த கோரிக்கைகள் உடனடி யாக நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கையை அறிவிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மஞ்சப் பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்
கள்ளக்குறிச்சி, ஜன.3- சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் பயன்பாட்டை ஊக்குவித்தல் தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாமல் மாற்றம் செய்திருக்கும் சிறந்த பள்ளி, கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மஞ்சப்பை விருந்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்தை குறைக்கும் வகையில் மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் 2023-2024 ஆம் நிதியாண்டிற்கான மஞ்சப்பை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடையை திரும்பட செயல்படுத்தி மாற்று பொருட்கள் மஞ்சப்பை, பாக்கு மட்டை, காக்கி கவர்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கப்படுகிறது. இதன்படி, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றம் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிகத் தேர்வு செய்து விருந்து வழங்கப்படும். மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட முதல் பரிசு ரூ.10 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.5 லட்சம், மூன்றாம் பரிசாக ரூ.3 லட்சம் வழங்கப்படும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்த விருந்திற்கான விண்ணப்ப படிவங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம்(தாலுக்கா அலுவலகம் பின்புறம்), விழுப்புரம்-605 602 என்ற முகவரியில் மே 1 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
ஐடிஐ மாணவர்களுக்கு தொழில் முனைவோர் ஊக்கப் பயிற்சி
கிருஷ்ணகிரி,ஜன.3- தமிழ்நாடு அரசின் உலக முதலீட்டாளர்கள் மாநாடு வரும் 7, 8 ஆம் தேதிகளில் சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுவதை முன்னிட்டு, ஓசூர் அரசு ஐடிஐ யில் பயிலும் மாணவர்களுக்கு தொழில் முனைவோர், தொழில்கள் குறித்த ஊக்குவித்தல் பயிற்சி ஐடிஐ டாட்டா டெக்னாலஜி அரங்கில் நடைபெற்றது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் சார்பில் ஓசூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநர் ஏ.வி.nஜகநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட சிறு,குறு நடுத்தர தொழில் முனைவோர் சங்கத்தின் தலைவர், வெற்றி ஞானசேகர் தொழில் முனைவோர் ஆவதற்கு கட்டமைப்புகள், தேவைகள், வழிகள், நடைமுறைகள் குறித்து விளக்கி ஊக்க பயிற்சியளித்து மாணவர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தார். பயிற்சி அலுவலர் முனிராஜ் முன்னிலை வசிக்க,இளநிலை பயிற்சி அலுவலர் நல்லமுத்து வரவேற்றார். பணி அமர்த்தும் அலுவலர் சாமுவேல், நன்றி கூறினார்.பல தொழில்நுட்ப பாடப்பிரிவுகள் சேர்ந்த 685 மாணவர்களை ஊக்குவித்தல் பயிற்சியில் கலந்து கொண்டனர்.
புதுச்சேரியில் தனியார் துறையில் வேலை வாய்ப்பு முகாம்
புதுச்சேரி,ஜன.3- புதுச்சேரி அரசின் வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவதற்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து புதுச்சேரி அரசின் வேலைவாய்ப்பு துறையின் இயக்குநர் சு.மாணிக்க தீபன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:- புதுச்சேரி அரசு தொழிலாளர் துறையின் கீழ் உள்ள வேலைவாய்ப்பகம் சார்பில் வெள்ளியன்று (ஜன. 5) கோரிமேடு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை முன்னணி தனியார் தனியார் நிறுவனங்களில், 450க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளது. இந்நிறுவனங்களில் பணியாற்றுவதற்கு சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு, தொழிற் பயிற்சி முடித்தவர்கள், கலை, அறிவியல்,வணிகவியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் முகாமில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இம் முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்கள் தற்குறிப்பு மற்றும் கல்வி தகுதிக்கான உண்மை , நகல் சான்றிதழ்களுடன், முகாமில் கலந்து கொண்டு பயன்பெறும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.