districts

img

மணலி, கொருக்குப்பேட்டை மழைநீர் வடிகால் பணிகள்: முதலமைச்சர் ஆய்வு

சென்னை, ஏப்.20- சென்னை கொருக்குப் பேட்டை, மணலி உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதனன்று (ஏப் 20) நேரில் சென்று ஆய்வு செய்தார். கொருக்குப்பேட்டையில் கண்ணன் சாலை, தியாகப்பா தெரு, ஏகாம்பரம், கொருக்குப்பேட்டை ரயில் நிலையம், கார்கில்நகர், எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் மழை நீர் வடிகால்வாய் கட்டும் பணியை முதல்வர் பார்வை யிட்டார். முதற்கட்டமாக சென்னை வடிவுடையம்மன் கோயில் தெரு அருகே மண லியின் ஒரு பகுதியான கொசஸ்தலை ஆறு  பகுதியையும் பார்வை யிட்டார். தற்போது அடுத்த வடகிழக்கு பருவமழைக்குள் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதி களிலும் மழைநீர் வடிகால்  அமைக்கப்பட்டு மழைநீர் தேங்காத வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார். அதன் அடிப்படை யில் ரூ.310 கோடி மதிப்பீட்டில் சென்னையில் உள்ள  அனைத்து முக்கிய வார்டுக ளில் இந்த பணிகள் நடை பெற்று வருகிறது. அடுத்த தாக  சென்னை எழும்பூர், குளத்தூர் போன்ற 4 இடங்க ளில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்து வரும் 2023-க்குள்  இந்த பணி களை முடிக்க வேண்டும்  என முதல்வர் உத்தரவிட் டுள்ளார். இந்த ஆய்வில் அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங்  பேடி, மேயர் பிரியா உள்ளிட்ட  பலர் கலந்துக் கொண்டனர்