districts

img

சமத்துவபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா

ராணிப்பேட்டை, ஜன.13- ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், அம்மூர் சமத்துவபுரம் குடியிருப்பு பகுதியில் திங்களன்று (ஜன. 13) சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.  இதில் கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு அங்குள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பொங்கல் விழாவில் கோலமிட்ட மகளிர் குழுக்களுக்கு பரிசு களை வழங்கினார். மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மகளிர் குழு பெண்களுக்கு புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள் எழுதிய வாழ்த்து மடல் மகளிர் குழு பெண்களுக்கு வழங்கி பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா, திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பா. ஜெயசுதா, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றியக் குழு தலைவர் வெங்கட்ராமன், அம்மூர் பேரூராட்சி தலைவர் சங்கீதா மகேஷ், துணைத் தலைவர் உஷாராணி, உதவி இயக்குநர் பேரூராட்சிகள் மெய்ஞான சம்பந்தம், உதவி செயற்பொறியாளர் அம்சா, செயல் அலுவலர் (பொ) லோக நாதன், ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறி யாளர் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுமார், சரவணன், வட்டாட்சியர் அருள்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.