districts

img

மாணவர்களிடம் மதவெறியை விதைக்கும் ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம்

திருவள்ளூர், டிச. 25- கும்மிடிப்பூண்டியில் தனியார் பள்ளியில் ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம் நடைபெற்றவுள்ளதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் வலியுறுத்தின. திருவள்ளூர் மாவட்டம்,  பெத்திக் குப்பம் அருகிலுள்ள உள்ளது சாமி ரெட்டி கண்டிகை. இங்குள்ள மதன்லால் கேமானி விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் டிசம்பர் 24 முதல் 31 வரை பள்ளிக் குழந்தைகளின் மனதில்  மதவெறியை விதைக்கின்ற ஆர்.எஸ்.எஸ் பயிற்சி பட்டறைகளை துவக்கியுள்ளது. விதிமுறைகளை மீறி கல்விக் கூடத்தில் நடைபெறவுள்ள இந்த பயிற்சி முகாமை தடுத்து நிறுத்த வலியுறுத்தி கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் அருகில்  விசிக மாவட்ட நிர்வாகி வழக்கறிஞர் நெடுஞ்செழியன் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில்  மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.துளசி நாராயணன், வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன் ஆகியோர் பேசினர். சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர்கள் டி.மதன், வசந்த், விசிக ஒன்றியச் செய லாளர் நேசக்குமார்  உட்பட பலர் கலந்து கொண்டனர். கண்டனம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்டச் செயலாளர் எஸ். கோபால் ஆட்சியருக்கு கடிதம் ஒன்றை எழுதி யுள்ளார். அதன் விவரம் வருமாறு:- விவேகானந்தா வித்யாலயாப் பள்ளியில் ஒரு வார காலம் ஆர்.எஸ். எஸ். பயிற்சி முகாம் நடத்த அழைப் பிதழ் அச்சிட்டு மாணவர்களை திரட்டு வதற்கான பணிகளை மாவட்ட முழு வதுமாக செய்து வருகின்றனர். குறிப்பாக அரசுப் பள்ளியிலிருந்து யோகா பயிற்சி என்கிற பெயரில் ஆசிரி யர்களே இந்த முகாமிற்கு அழைத்துச் செல்வதற்கான பணிகளில் ஈடுபடு வதாக தெரிகிறது. திருவள்ளூரை அடுத்த மேல்நல் லாத்தூர் உயர்நிலைப் பள்ளியிலி ருந்து 45 மாணவர்களை அழைத்து சென்றுள்ளனர்.

அதேபோல், கடம்பத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் மாண வர்களை அழைத்து செல்வதற்கான பணிகள் நடைபெறுகிறது. அரையாண்டுத் தேர்வு முடிந்து மாணவர்களுக்கு விடுமுறையில்,  அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் எவ்வித பயிற்சி வகுப்புகளும் முகாம் களும் நடத்தகூடாதுக் என அரசு அறிவித்துள்ள சூழலில், யோகா என்கிற  பெயரில் மாணவர்களை அழைத்து செல்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ஆர்எஸ்எஸ் பேரணி குறித்து உயர்நீதிமன்றம் சில  வழிகாட்டுதலை வழங்கியுள்ள நிலையில், இந்த அமைப்பு  வெளிப்படையாகவே  அழைப்பிதழ் அச்சிட்டு  வெள்ளை சட்டை, அரைக்கால் பேன்ட், சங்க பேட்ஜ், பயிற்சிக்கு தேவையான உப கரணங்கள் எடுத்து வர வேண்டும் என்றும்,  கட்டணம் ரூ. 200 என்று அறிவித்து   பயிற்சி முகாமில் மாணவர் களை பங்கேற்க செய்து  அதன்  நோக்கங்களுக்கு பயன்படுத்து கின்றனர். இந்தப் பள்ளி தனியார் நிர்வாக மாக இருந்தாலும், அனைத்து தரப்பு  மாணவர்களும் பயிலக்கூடிய இடமாக உள்ளது. மாவட்ட முழுவதும் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களை அழைத்து செல்வதை தடுக்க வேண்டும்.  இப் பணியில் ஈடுபடும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.