districts

பேருந்தில் மழைநீர் ஒழுகியதால் ரூ.50 ஆயிரம் நட்ட ஈடு

சென்னை,அக்.31-  தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு அரசு விரைவு போக்கு  வரத்து கழக அல்ட்ரா டீலக்ஸ் வகையை சேர்ந்த பேருந்தில் சாதாரண பேருந்து கட்ட ணத்தை விட கூடுதலாக வசூலிக்கப் படுகிறது. .இந்த பேருந்துகள் முறை யான பராமரிப்பின்றி இருக்கைகள் மிகவும் மோசமாக இருந்ததோடு  கூரையில் இருந்து  மழைநீர் ஒழுகியதால் சோமசுந்தரம் என்ற வழக்கறிஞர் நுகர்வோர் குறைதீர்க்கும் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். தனக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என அவர் கோரி இருந்தார். இந்த வழக்கு விசாரணை யில் பயணி சோமசுந்தரத்துக்கு ரூ.50 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு நுகர்வோர் குறைதீர் நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. மற்றொரு சம்பவத்திலும் பயணிக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் நஷ்ட ஈடு வழங்க நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.  அப்துல் அஜிஸ் என்ற மூத்த குடிமகன் சென்னை கோயம் பேட்டில் இருந்து வேதாரண்யம் செல்ல 9 டிக்கெட் முன்பதிவு செய்தார். அவருக்கு உரிய இருக்கை கள் வழங்கவில்லை. 40 இருக்கை கள் கொண்ட அந்த பேருந்தில் அப்துல் அஜிசும், குடும்ப உறுப்பி னர்களும் நின்று கொண்டு பயணம் செய்தனர். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பாதிப்பு கொண்ட அப்துல் அஜிஸ் நுகர்வோர் கோர்ட்டில் முறை யிட்டார். முன்பதிவு செய்த பயணிக்கு அதற்கான இருக்கை வழங்காததால் அரசு விரைவு போக்குவரத்து கழகம் பயணிக்கு ரூ.10 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.