districts

திருவான்மியூரில் ரவுடி கொலை

சென்னை, டிச. 2- திருவான்மியூர் ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் விக்கி (எ) விக்னேஷ் (36). இவர் மீது கொலை,கொலை முயற்சி,கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. விக்னேஷ் திருவான்மியூர் சிக்னல் அருகே வியாழக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் பைக்கில் வந்த 2 பேர் விக்னேஷை வழிமறித்து தகராறு செய்தனர். தகராறு முற்றவே அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் விக்னேஷை வெட்டினர். இதில் பலத்தக் காயமடைந்த விக்னேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விக்னேஷ் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.