கடலூர், மார்ச் 3- கடலூர் மாவட்ட சாலை போக்குவரத்து சங்கத்தின் புதிய கிளை பெயர் பலகை திறப்பு விழா மேல்பட்டாம்பாக்கத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சங்கத்தின் துணைத் தலைவர் டி. ஆறு முகம் தலைமை தாங்கினார். செயலாளர் கே.சசிகுமார் வரவேற்புரை ஆற்றினார். சங்கத்தின் பெயர் பலகையை சிஐடியு மாவட்ட செயலாளர் டி.பழனிவேல் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். சாலை போக்குவரத்து சங்கத்தின் மாவட்ட தலைவர் வீ.திருமுருகன், பட்டாம்பாக்கம் பேரூராட்சி தலைவர் வி.ஜெயமணி, சாலை போக்குவரத்து சங்கத்தின் மாவட்ட செயலாளர் சண்முகம், சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் ஜெய பாண்டியன், சிஐடியு மாவட்ட இணை செயலாளர் ஸ்டாலின், சட்ட ஆலோசகர் லெனின் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பொருளாளர் டி. சந்திரசேகர் நன்றி கூறினார்.