திருவள்ளூர், டிச 31- மீஞ்சூர் அருகே திருப்பேர் கிராமத்தில் சுகாதாரமற்ற சூழல் நிலவுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதை அதி காரிகள் ஆய்வு செய்து உரிய நடவடி க்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மீஞ்சூர் ஒன்றியம் ஏலியம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட திருப்பேர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் வசிக்கின்றனர். இங்கு போடப் ்பட்ட சாலைகள் தரமற்றசாலைகள் என்பதால் பழுதடைந்துள்ளது. மேலும் குடிநீருக்காக அமைக்கப் ்பட்ட குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு மாதக்கணக்கில் சரி செய்யாமல் உள்ளது. இதனால் சேறும் சகதியுமாக உள்ள மழை தண்ணீருடன், குடிநீர் கலந்து வரும் தண்ணீரை பருகி வருகின்றனர். இதனால் மரம் நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனை உடனடி யாக சீரமைக்க வேண்டும். மேலும் குடிநீர் தொட்டி மற்றும் நீர் நிரம்பிய ஏரியிலும் குப்பைகள் கொட்டுவதால் நிலத்தடி நீரும் பாதிக்கும் அபாயம் உள்ளது. குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்களை உருவாக்கும் பண் ணைகளாக மாறியுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கிளைச் செயலாளர்கள் ஜி.கோவிந்தராஜ், ஆர்.தேவராஜ் ஆகியோர் கூறுகை யில்,” மக்களின் முக்கிய பிரச்சனை குடிநீராக்கும். இங்கு ஏற்பட்டுள்ள குழாய் உடைப்பை உடனடியாக சீரமைக்க வேண்டும்.குடிநீர் மேல் தேக்க தொட்டியை உரிய காலத்தில் சுத்தம் செய்ய வேண்டும், கிளை நூலகத்தை திறந்து, அதில் புத்தகங்கள் இருப் பதை உறுதி செய்ய வேண்டும், தெரு விளக்குகள் எரிவதை பராமரிக்க வேண்டும். கிராமத்தில் விண்ணப் பித்த அனைவருக்கும் முதியோர் ஓய்வு ஊதியம் கிடைக்க அதிகாரி கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்றனர்.