districts

img

மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஓய்வு பெற்ற மின் ஊழியர்கள் நிதி

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் விழுப்புரம் மாவட்டம் சார்பில் தேர்தல் நிதி 60 ஆயிரம் ரூபாயை மாநிலச் செயலாளர் எஸ்.சண்முகசுந்தரம் தலைமையில் நிர்வாகிகள் வழங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார். இதில் சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.முத்துக்குமரன், மின் ஊழியர் மத்திய அமைப்பின் கிளைச் செயலாளர் ஆர்.சேகர், சங்கத்தின் பொருளாளர் எம்.சந்திரசேகர், கிளைத்தலைவர் சி.ஜெயராமன், நிர்வாகிகள் எஸ்.கண்ணையன், கே.ராஜேந்திரன், வி.பாண்டுரசனங்கன், வி.ராமலிங்கம், எம்.வளர்மதி, கே.ஏழுமலை, கே.பூபாலன், டி.ராமலிங்கம், ஏ.சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.