செய்யூர், நவ. 13- திருப்போரூர் வட்டம், சிறுதவூரில் தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட 31 ஏக்கர் நிபந்தனை நிலத்தை மீட்டு மீண்டும் தலித் மக்களிடம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநாடு வலி யுறுத்தியுள்ளது. தீண்டாடை ஒழிப்பு முன்னணியின் செங்கல்பட்டு மாவட்ட 5வது மாநாடு ஞாயிறன்று (நவ.13) செய்யூரில் மாவட்ட துணைத் தலைவர் எ.ராம லிங்கம் தலைமையில் நடைபெற்றது. அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட துணைத் தலைவர் எம்.முத்திருளப்பன் வாசித்தார். மாநாட்டை துவக்கி வைத்து சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இ.சங்கர் பேசினார். மாவட்ட செய லாளர் கே.வாசுதேவன் வேலை அறிக்கை சமர்பித்தார். மாநாட்டை வாழ்த்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் மாவட்ட செயலாளர் சூ.க.ஆதவன், கல்பாக்கம் அணுமின் நிலைய எஸ்சி,எஸ்டி ஊழியர் சங்க நிர்வாகி எஸ்.சகாதேவன், மார்க்சிஸ்ட் கட்சியின் செய்யூர் வட்ட செயலாளர் எஸ்.ரவி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநாட்டை நிறைவு செய்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் பேசினார். செய்யூர் வட்டச் செயலாளர் எஸ்.கோவிந்தசாமி நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
மதுராந்தகம் வட்டம் தேவனூர், தண்டலம், சேனியர்மேடு இருளர் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் சுடுகாடு அமைத்து தர வேண்டும், செய்யூர் வட்டத்தில் காவனூர் கிராமத்தில் தலித் மக்கள் சுடுகாடு செல்ல பாதை அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறை வற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள்
30 பேர் கொண்ட மாவட்டக்குழு விற்கு தலைவராக இ.சங்கர், செயலாளராக க.புருசோத்தமன், பொருளாளராக எ.ராமலிங்கம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.