districts

img

கோலியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த கோரிக்கை

விழுப்புரம்,அக்.4- விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும், 24- மணி நேர சிகிச்சை அளிக்கும் வகையில் தரம் உயர்த்த வேண்டும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு குடியிருப்புகளை கட்டித்தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டார வளர்ச்சி (பிடிஓ) அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளைச் செயலாளர் ஜி.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மூர்த்தி, வட்டச் செயலாளர் ஆர்.கண்ணப்பன், நகரச் செயலாளர் என்.மேகநாதன், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில நிர்வாகி கே.அம்பிகாபதி, சி.மதுசூதனன், ஜெ.சம்சுதீன், எம்.சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.