சென்னை, ஜூலை 4- இலங்கையில் உயிரி ழந்த ஒரத்தநாடு கோபால் சாமி என்பவரின் உடலை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்கு உதவி செய்யு மாறு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு வடசென்னை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீரா சாமி கடிதம் எழுதியுள்ளார்.
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள சேதுராயன்குடிக்காட்டைச் சேர்ந்தவர் கோபால்சாமி. இவருக்கு மனைவி சுகுணா மற்றும் குழந்தைகள் உள்ள னர். கோபால்சாமி கடந்த ஜூன் 27ஆம் தேதி இலங்கை யில் உள்ள தனது உறவி னரை பார்ப்பதற்கு சென்றார். பின்னர், கம்போடியா செல்ல கொழும்பு விமான நிலையம் சென்ற போது ஜூன் 29ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார்.
இந்நிலையில், இலங் கையில் உயிரிழந்தவரின் உடலை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்கு உதவி செய்யுமாறு கலாநிதி வீராசாமி எம்பி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங் கருக்கு எழுதியுள்ள கடிதத் தில், ஒரத்தநாடு தாலுக்கா சேதுராயன் குடிக்காடு கிரா மத்தை சேர்ந்த கோபால் சாமி என்பவர் இலங்கையில் உள்ள அவரது உறவினர் களை காணச்சென்றபோது, மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 28ஆம் தேதி கொழும்பு விமான விமான நிலையத் திலேயே இறந்து விட்டார்.
தற்போது அவரது உடல், மாவட்ட மருத்துவமனை யில் வைக்கப்பட்டுள்ளது. அவரை இழந்து வாடும் அவரின் உறவினர்களின் வேண்டுகோளை ஏற்று அவரது உடலை தமிழ் நாட்டிற்கு கொண்டு வருவதற்குத் தேவையான உதவிகளைச் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன் என அதில் கேட்டுக் கொண் டுள்ளார்.