districts

கள்ளச்சாராயம் குறித்து புகார் செய்ய செல்போன் எண்கள்

திருவள்ளூர்,மே 16-  

    திருவள்ளுர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம், போலி மது விற்பனை குறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல்  தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆந்திர மாநிலத்தில் இருந்து கள்ளச்சாராயம் கொண்டு  வருவதை தடுக்கும் வகையில் தமிழக - ஆந்திரா எல்லை யோரம் உள்ள புதூர் மேடு, தேவலாபுரம், காட்டூர்,  பொன்பாடி, ஊத்துக்கோட்டை, நாகலாபுரம் ரோடு, சத்திய வேடு ரோடு, பொம்மராஜா குளம், ஆரம்பாக்கம் உள்ளிட்ட  பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

  கள்ளச்சாராயம், போலி மதுபானம், சில்லறை விலை யில் மதுபானங்கள், கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனை குறித்து ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் 63799 04848, 9444005105 என்ற தொலைபேசி எண்ணிற்கு வாட்சப் மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவே தகவல்  தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்கள் விவரங்கள் பாதுகாக்கப்படும்.