districts

மழைநீர் வடிகால் பணிகளை முடிக்காத ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம்

சென்னை, ஜூலை 7 - சென்னை மாநகராட்சிக்குட் பட்ட பகுதிகளில் மேற்கொள் ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் திட்டப்பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காமல் தொய்வு ஏற்படுத்திய 8 ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.2,25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் சிங்கார சென்னை 2.0 ஆசிய வளர்ச்சி வங்கி, உலக வங்கி, உட்கட்ட மைப்பு மற்றும் வசதிகள் நிதி  மூலதன நிதி மற்றும் வெள்ளத்  தடுப்பு சிறப்பு நிதி போன்ற பல்வேறு நிதி ஆதாரங்களின் மூலம் ரூ.4,070 கோடி மதிப்பீட்டில் 1033 கி.மீ. நீளமுள்ள மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. சென்னை மாநகராட்சியில் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் கொசஸ்தலையாறு, அடையாறு,  கூவம் மற்றும் கோவளம் வடி நிலப்பகுதிகளின் பன்னாட்டு வங்கிகளின் நிதியுடன் ஒருங் கிணைந்த மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடை பெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்க இன்றும் 3 மாதங்களே உள்ள நிலையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணி களை துரிதமாக முடித்து பயன் பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒருசில இடங்களில் குறிப்பிட்ட காலத்திற்குள் நிர்ணயிக்கப்பட்ட பணியினை முடிக்காமல் மழைநீர்  வடிகால் அமைக்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே இப்பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரர்களுக்கு  ரூ.25,000 வீதம் ரூ.2.25.000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.