districts

மழைக்காலத்திற்கு முன்பு சாலை பணிகளை முடிக்க வேண்டும்

சென்னை, ஜூன் 30 - மழைக்காலத்திற்கு முன்பு அனைத்து சாலை பணிகளையும் முடிக்க வேண்டும் என்று மாநகராட்சி கூட்டத்தில் ஆர்.ஜெயராமன் எம்.சி., வலியுறுத்தினார். சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் வெள்ளியன்று (ஜூன் 30) ரிப்பன்  மாளிகையில் மேயர் ஆர்.பிரியா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நேரமில்லா நேரத்தில் பேசிய உறுப்பினர் ஆர்.ஜெயராமன் பேசியதன் சுருக்கம் வருமாறு: பல இடங்களில் தெருவிளக்குகள் எரிவதில்லை. மழைநீர் கால்வாய்கள் அமைப்பதற்காக அகற்றப்பட்ட மின் விளக்குகள் மீண்டும் நிறுவ பிப்ரவரி மாதம் ஒப்பந்தம் கோரப்பட்டது. ஆனால், இதுவரை பணிகள் மேற் கொள்ளப்படவில்லை. இது தொடர்பாக அதிகாரிகளை தொடர்ந்து வலியுறுத்தியும் பணி நடைபெற வில்லை. ஜோதி நகர் 8வது தெரு வில் ஓராண்டாக தெரு விளக்கு எரிய வில்லை. இதை சரி செய்ய வேண்டும். ராமநாதபுரம் பள்ளிக்கு ரூ 2.62 கோடி மதிப்பீட்டில் 10 வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது. அங்குள்ள உயர்நிலைப் பள்ளியில் கடந்தாண்டு 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி யவர்களில் 50 விழுக்காடு தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு 82 விழுக் காடு தேர்ச்சி பெற்றனர். அந்தப் பள்ளி யில் 100க்கு 100 மதிப்பெண் பெற்ற மாண வர்களும் உள்ளனர். அண்மையில் நடந்த கலந்தாய் வில் 9 ஆசிரியர்கள் பணி மாறுதலில் சென்றுவிட்டனர். தலைமை ஆசிரியர் உட்பட 4 பேர் மட்டுமே உள்ளனர். எனவே, 9 புதிய ஆசிரியர்களை பணி மாறுதல் மூலம் கொண்டு வர வேண்டும் அல்லது பள்ளி மேலாண்மைக்குழு வாயிலாக 9 பேரை நியமிக்க வேண்டும். கடந்தாண்டு நவம்பர் மாதம் நடை பெற்ற மன்றக் கூட்டத்தில், தூய்மைப் பணிக்கு கூடுதல் ஊழியர்கள் தேவை  என்று கோரியிருந்தேன். வார்டில் 144 தெருக்கள், 5.41 கி.மீ பேருந்து சாலைகள் உள்ளன.

மொத்தத்தில் 29.28 கி.மீ நீளத்திற்கு 30 தொழிலா ளர்கள் உள்ளனர் என்று பதிலளிக் கப்பட்டுள்ளது. ஆனால், பொறியியல் துறையில் 189 உட்புறச் சாலைகள் (40 கி.மீ) என்று பதிவு செய்யப்பட் டுள்ளது. மேலும், புதிய குடியி ருப்புகள் உருவாகி கூடுதல் சாலை கள் உள்ளன. 4வது வார்டில் துப்புரவு பணி செய்யும் தனியார் நிறுவனம், பல பகுதிகளில் தினசரி குப்பைகளை அள்ளுவதில்லை. எனவே, உட்புறச் சாலைகளை முறையாக கணக்கிட்டு, தூய்மை பணியாளர்களை நியமிக்க வேண்டும். 89 சாலைகளை செப்பனிட அனுமதி பெறப்பட்டுள்ளது. 17 சாலைகளில் மட்டுமே ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. மழைக்காலத்திற்கு முன்பாக அனைத்து சாலை பணி களையும் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதற்கு பதிலளித்த மேயர் ஆர்.பிரியா, “4வது வார்டில் உள்ள 89 சாலை களில் 17 சாலைகளுக்கு ஒப்பந்தம் கோரப்பட்டு, சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. எஞ்சிய சாலை களுக்கும் ஒப்பந்த கோரப்பட்டுள்ளது. விரைவில் பணி தொடங்கும். கூடு தலாக 8 தூய்மை பணியாளர்கள் நியமி க்கப்பட்டுள்ளனர். மக்கள் தொகை அடிப்படையில்தான் பணியாளர்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படும். பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தேவை யான ஆசிரியர்களை நியமிக்க பரி சீலிக்கப்படும்” என்றார்.